Politics

அமலாக்கத் துறை நடவடிக்கையில் டெல்லி கேள்வி

Email :14

சென்னை:
அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கைத் தொடர்ந்து தமிழகத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகள் தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதற்கேற்ப, அமலாக்கத்துறை மீது இப்போது ‘டெல்லி’யிலிருந்து கடும் கேள்விகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் டாஸ்மாக் தலைமையகத்தில் நடந்த சோதனை மற்றும் அதன் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ.1000 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கூறியது. ஆனால், இது அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்றும், மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது என்றும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர். “பொய் பேசாதீர்கள். உண்மை என்ன என்பது செய்திகளில் வெளிவந்து விட்டது. நீங்கள் மேற்கொண்ட ரெய்டு முறையானதா என கேள்வி எழுகிறது. மாநில அரசு கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்” எனக் கண்டித்தனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு மேலும் நடவடிக்கை எடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவை வழங்கியது. விரிவான பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் பின்னணியில், அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் டெல்லி தலைமையகம் நேரடியாக விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “உங்கள் நடவடிக்கைகளில் உண்மையா? உறுதியா? சரியான ஆதாரங்கள் இருக்கிறதா? பொய்யான தகவல்களை வைத்து வாதம் நடத்துவது நீதிமன்றத்தின் முன்னிலையில் பிளாக் மார்க் அடைவதாக தெரியுமா?” என கடுமையாக கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts